Friday, May 7, 2010

மூதுரை

உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவரோ-கற்றூண்

பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான்.

(பா-6)


அதிகச் சுமை ஏற்றப்பட்ட கல்தூண், சுமையைத் தாங்க இயலாதபோது, உடைந்து சிதறுமே அல்லாமல் சிறிதும் வளையாது. அது போலவே, மானம் போகும் நிலை ஏற்பட்டால் சான்றோர் உயிரை இழப்பாரே அன்றி, மானம் இழந்து மாற்றானுக்குப் பணிய மாட்டார்கள்.

No comments: