Thursday, February 21, 2013

அறிவு ஊடகமாக தாய்மொழி:- தாய்மொழி நாள்

1952Bm BiÓ ReLs RônùUô¯ûVd LôlTRtLô] úTôWôhPj§p E«o ¿jR YeLúRN ùUô¯Ù¬ûU úTôWô°L°u ¨û]YôL, JqúYôo BiÓm ©lWY¬ 21I NoYúRN RônùUô¯ Sô[ôL Ùù]vúLô ¨ßY]m ùLôiPô¥ YÚ¡\Õ. 1999-p CÕ ©WLP]lTÓjRlThPÕ.
EXLj§u TpúYß ùUô¯Ls GuTûY ùYßm ùRôPo×lTôhÓ NôR]eLs UhÓUpX. AûY JqùYôußm R²f£\l× YônkR A±Üd L[g£VeLs. TpúYß C]eL°u LXôNôWeLû[Ùm YWXôtû\Ùm Rôe¡f ùNpÛm LôX T¬UôQ FPLeLú[ ùUô¯Ls. G]úY, TpúYß E«oLû[l TôÕLôdÏm TÑûU CVdL SPY¥dûLLû[lúTôX, TpúYß ùUô¯Lû[l TôÕLôdÏm TuùUô¯«V SPY¥dûLLÞm úRûY Guß Ùù]vúLô®]o UhÓUpX, EXùLe¡Ûm Es[ ùUô¯ BoYXoLÞm U²R E¬ûU BoYXoLÞm Smס\ôoLs. ùNVpThÓ YÚ¡\ôoLs. JÚ ùUô¯«u A¯Ü ApXÕ Årf£ GuTÕ, JÚ Ï±l©hP C]j§òPôL Y[okÕ YkR A±Ü UWûT J¯jÕdLhÓYRtÏf NUUôÏm. JÚ ùUô¯ Ctß ®ÝkÕ ®hPôp, LûR AjúRôÓ Ø¥kRÕ. AûR ÁhL Ø¥VôÕ. Cu]Øm £kÕNUùY° SôL¬L GÝjÕLÞdÏs J°k§ÚdÏm RLYûX SmUôp A±V Ø¥V®pûX.
£ß ùUô¯LÞdÏ CtßlúTôÏm ATôVm CÚd¡\Õ Gu\ôp, Rªr úTôu\ ùT¬V, C] ùUô¯LÞdÏ ùLôgNm ùLôgNUôLl ThÓlúTôÏm ATôVm GlúTôÕm CÚkÕ YÚ¡\Õ. AûR Á± AkR ùUô¯Ls ReLû[ LôXmúRôßm ×Õl©jÕd ùLôiÓ YÚ¡u\]. Cuû\V EXLUVUôRp ãZ#p C] ùUô¯Ls Be¡X ùYs[j§p A¥jÕf ùNpXlTPúYô ApXÕ ÁiÓm ×jÕ«o ùTtß EVo¨ûXdÏf ùNpXúYô - CWiÓdÏúU Yônl×Ls CÚd¡u\].
G§oYÚm EXLm ùTôÚ[ôRôW ç«Ûm AW£Vp ç«Ûm GjRûLV §ÚlTjÕdÏm Es[ôLXôm. CPÕ, YXÕ TôûRL°p Juû\j úRoÜ ùNnVXôm. SÓlTôûR«p ùNpXXôm. B]ôp LPkR èt\ôiûPlúTôX, ùTÚYô¬Vô] UdLû[ JÕd¡jRs°®hÓ, £ßTôuûU úUh¥ûU NêLm UhÓúU ùTôÚ[ôRôWj§Ûm AW£V#Ûm LXôNôWjR[eL°Ûm Bd¡WªjÕd ùLôi¥ÚkR ãZûX C² ùRôPW Ø¥VôÕ. _]SôVL úYhûL úUÛm úUÛm ®¬YûPkÕ ùLôiúP ùNp¡\Õ. AW£Vp R[j§#ÚkÕ ùTôÚ[ôRôW, LXôNôW - ϱlTôL FPLj R[eLÞdÏ - AÕ ®¬kÕ ùNpÛm.
CkRf ãZ#p YôrYôRôWjÕdLô] A±Üj úRûYLû[ Be¡Xm UhÓúU éoj§ ùNnÕ®PôÕ.
Ck§Vô®p ùUô¯d ùLôsûL GuTÕ ÏUôvRôd ùLôsûL. G_Uô]àdÏj úRûYVô]ûR UhÓm LtßdùLôs GuTúR ARu AojRm. Ck§ ùUô¯dLôL §p#dLôWoLs ùNnR SPY¥dûLLs GpXôm, AûR úYß Uô¨XeL°p §¦lTRtLô] SPY¥dûLLú[ R®W, ¨_Uô] Ck§ ùUô¯ Y[of£dLô] SPY¥dûLLs ApX GuTÕRôu EiûU. Ck§dúL CkR L§ùVu\ôp, UWôj§ Tt±úVô Rªr Tt±úVô úLhTôú]u.
Cuù]ôÚ GÓjÕdLôhûPl TôÚeLs. ûUdúWôNô@lÓm úSôdVôÜm á¡Þm ReLs úNûYLû[ Rªr EsTP Ck§V ùUô¯L°p ùLôÓdL ØuYÚ¡u\]. LôWQm, NkûR ®¬YôdLjÕdÏ ùUô¯ RûPVôL CÚdÏmúTôÕ, Be¡Xj§úXúV GpXôYtû\Ùm Nô§dL Ø¥VôÕ Guß ùR¬¡u\úTôÕ, ReLs ùTôÚsLû[Ùm úNûYLû[Ùm AYoLs ùUô¯Uôt\m ùNnV Øû]¡\ôoLs. ùY°lTûPVô] ®VôTôW Ej§Rôu Gu\ôÛm, CÕ CVpTô]Õ.
B]ôp AWÑ Gu] ùNn¡\Õ? ReLs YôdÏdLôL GpXô Ck§V ùUô¯L°Ûm ©WNôWm ùNnÙm JÚ úR£Vd Lh£, Bh£dÏ YkRÜPu Sm Sôh¥p ¨û\V ùUô¯Ls CÚlTRôp GpXôYtû\Ùm Y[odL Ø¥VôÕ Guß úTÑ¡\Õ.
Uj§V AW£u ¨ûXlTôhûP JúW JÚ R[j§p UhÓm TôÚeLs. FWL Y[of£, ¡WôUl×\ Y[of£ûVl Tt± úTÑm AWÑm ©\Úm, ¡WôU Y[of£dÏj úRûYVô] TpúYß ùRô¯pÖhTeLû[Ùm ¨oYôLj §\uLû[Ùm Tt±V èpLs UdLs úTÑm ùUô¯L°p CpûX GuTûR A±kÕ EÚlT¥VôL JÚ ®`VjûRÙm ùNnY§pûX. AeùLôußm CeùLôußUô] ØVt£Ls Utßm R²SToL°u ØVt£L°]ôp ®û[kR TXuLû[j R®W, SÅ] úY[ôi ÖhTeLs, Uôtß úY[ôi ØVt£Ls, Ñtßl×\fãZp Es°hP TpúYß Õû\L°p A±Ül TWYp SPY¥dûLLû[ R²VôÚm AWÑ NôWô ¨ßY]eLÞm GÓjR A[ÜdÏ AWÑ ùNnR§pûX.
UÚjÕYm, Lp®, A±®Vp ùRô¯pÖhTm, ÑtßXô, ¨§, ùRô¯p úTôu\ ùTôÕUdLs Õû\L°p AWÑm N¬, R²VôoLÞm N¬ (Á¥Vô EsTP) ªLlùT¬V A±Ül TWYp ùNVpTôÓL°p DÓTÓY§pûX. Øû\Nôo Lp® Be¡Xj§p CÚlTÕ GuTÕ JhÓùUôjR A±Ül TWYp ùNVpTôÓLÞúU Be¡Xj§p CÚkRôp úTôÕm Gu\ ãZûX EÚYôd¡ ûYj§Úd¡\Õ. CÕ Ck§Vô®Ûm £X Bl©¬dL SôÓL°Ûm UhÓúU. úYß GkR Y[Úm, ®ûWÜ Y[of£«p CÚdÏm SôÓL°Ûm ClT¥ CpûX.
R]Õ Øuú]t\jÕdLôLÜm Sôh¥u Øuú]t\jÕdLôLÜm A±ûYl ùT\j Õ¥dÏm TôUWoLû[, Rª¯p CÕ ¡ûPVôÕ, úYiÓùUu\ôp Be¡Xj§p T¥ Guß ùNôpYÕ, ùWôh¥ CpûXVô, úLd Nôl©Ó Guß BQYm ©¥jR ©ùWgÑ úLôULs JÚj§ Auû\V ©Wôu£u NôUô²V UdLû[l TôojÕf ùNôu] ùNôtLÞdÏf NUUô]Õ.
RªZLjûRl ùTôßjRYûW, Cuû\V AWÑ ùUô¯«u TpúYß R[eL°p Y[of£dLô] ùNVpTôÓLû[ FdÏ®dÏm AWNôLúY CÚd¡\Õ. ÁiÓm JÚ ùUô¯ UßUXof£dLô] LôXUôL CûR Aû]YÚm TVuTÓj§d ùLôs[ Ø¥Ùm Gu\ôÛm, ùY°lTûPVô] TX BdLéoY ¨LrÜLû[l TôodL Ø¥V®pûX. EXLj Rªr UôSôÓLs, Rªr CûQV UôSôÓLs úTôu\Yt±u ùRôPof£ Gu] B«tß G]j ùR¬V®pûX. ØjRªr, A±®VpRªr, L¦²jRªûZj ùRôPokÕ, úY[ôi Rªr, TÑûUj Rªr, Y¦LjRªr úTôu\ûY EÚYôL AWÑ ØVt£ GÓdL úYiÓm. Rª¯u º¬[ûU Ïu\ôUp CÚdL CûY AY£Vm.
Á¥VôÜm AW£Vp Lh£LÞm ùUô¯ ®YLôWj§p Es[ EQof£UVUô] ©Wfû]LÞdÏ ¾² úTôÓ¡u\]úY J¯V, ARu NêL ùTôÚ[ôRôW AmNm GqYôß Y[odLlTPôUp ×\dL¦dLlTÓ¡\Õ GuTûRl Tt± úTÑYúR CpûX. RônùUô¯ ùT\ôRûR NêLm ùT\ôÕ Guß PôdPo Yô.ùN. ÏZkûRNôª GݧVÕ ètßdÏ èß EiûU.
ùUô¯ BoYXoLû[l ùTôßjRYûW ùUô¯ûV Ko C] AûPVô[UôLúY Cu]Øm Tôod¡\ôoLs. RônùUô¯ Y¯dLp® UhÓúU úYiÓm Guß L]ÜX¡p CÚd¡\ôoLs. AÕ SûPØû\f Nôj§VªpXôUp úTôÏmúTôÕ, ®Wd§«p ùUô¯ A¥lTûPYô§Lû[l úTôXf ùNVpTÓ¡\ôoLs. AÕ ©\ùUô¯ G§olTôL Uô±, RônùUô¯ûVÙm JÚ ªë£Vl ùTôÚ[ôL Uôt± ®Ó¡\Õ. ClT¥lThP ãZ#pRôu RªrSôh¥p Rªr ùUô¯ ϱjR ùNôpXôPpLs CÚd¡u\]. CeúL ThPôúX Tt±dùLôsÞm AW£Vp R[UôL ùUô¯ CÚd¡\Õ. C§p SpXÕØiÓ, ùLhPÕØiÓ.
Rªrf NêLj§u G§oLôXm GuTÕ, úUÛm úUÛm úLô¥dLQdLô] RªZoLs ReLs ùNôkR YôrdûL«p Øuú]ßYûRf NôokRÕ. ARtÏ Be¡Xm úRûY GuT§p SUdÏ UôßThP LÚjúR ¡ûPVôÕ. úYß ùUô¯Lû[Ùm úRûYlThPôp TVuTÓj§d ùLôs[Xôm. B]ôp Rª¯p A±Ü EsLhPûUl× ®¬Yô¡, TVuªÏ RLYpLs ¨û]jR úSWj§p CûQVm úTôu\ FPLeLs êXUôLÜm èXLeL°Ûm ùRÚúYôWd LûPL°Ûm ¡ûPjRôp AÕ AYoLû[ Y[lTÓjÕm.
CkR ¨ûX EÚYôL Rª¯p TX ùUô¯ NôokR êXôRôW Y[eLs úRûYlTÓ¡u\]. £\kR GÝjRô[oLÞm ùUô¯ùTVolTô[oLÞm B«WdLQd¡p úRûYlTÓ¡\ôoLs. AYoLÞdÏ TpÕû\ ALWô§LÞm úRûYlTÓ¡u\]. Õû\NôokR ùUô¯SûPLû[ EÚYôdLdá¥V ãZûX AYoLs ùTßYRtÏ YN§Ls úYiÓm. CRtÏ AW£u ØVt£Ls UhÓUpX, FPLj§u ØVt£Ùm £®p NêLj§u Ht×m ªL Ød¡Vm. CRtÏ R²jRªr úTôu\ A±®VpNôWô AÔÏØû\LÞdÏ ®ûPùLôÓjÕ®hÓ, NêL ùUô¯«VûXf N¬VôLl ׬kÕùLôsÞm TdÏYØm úYiÓm. Sôm TpLXôNôWf ãZ#p Yôr¡ú\ôm. SUÕ ùUô¯ÁÕ ©\ ùUô¯L°u RôdLjûR Øt±Ûm RÓdL Ø¥VôÕ. áPÜm áPôÕ.
NÁTj§p, RªrSôh¥u ùRôPdLlTs°L°p JÚ Lp®l ×Wh£úV SPkÕ YÚ¡\Õ Guß GÝjRô[Úm ®ÓRûXf £ßjûRLs Lh£ GmGpHÜUô] W®dÏUôo Gݧ«ÚkRûRl T¥júRu. CÕ úUp¨ûXl Ts°L°Ûm, Lpí¬L°Ûm áP SPkRôL úYiÓm. Lp®l×XjÕdÏ ùY°úVÙm SPkRôL úYiÓm. RªûZf ùNmùUô¯VôL A±®dL ER®V, RªûZl TôP ùUô¯VôL BdÏYRtÏ CÚkR RûP ¿e¡VRôp RtúTôÕ U¡rf£d LP#p Brk§Úd¡\ RªZL AWÑ ¨û]jRôp, CeúL úUÛm TX NôRû]Ls SPdÏm. ùUô¯ Y[W, C]m Y[Úm. EP]¥VôL, Øt±Ûm ×Õl©dLlThP §hPeLû[d ùLôiP EXLj Rªr UôSôhûPÙm Rªr CûQV UôSôhûPÙm SPjR EP]¥VôL AWÑ ØuYW úYiÓm.
 நன்றி; தினமணி.

Thursday, March 3, 2011

தினச் சோறு கூடவே இனச் சோறும் ஊட்டினாய்!

கண்ணீர் அஞ்சலி..
ஒரு
புலிப் போந்தை ஈன்று
புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?


மாமனிதனின்
மாதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை;
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன்
சூலில் நின்று - அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது; உன்-
பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை - ஈழத் தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக் காட்டுவேன் என்று..
சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது;
நீல இரவில் - அது
நிலாச் சோறு தின்னாமல் -
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;

அம்மா!
அதற்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே
இனச் சோறு ஊட்டினாய்;
நாட்பட -
நாட்பட - உன்
கடைக்குட்டி புலியானது;
காடையர்க்கு கிலியானது!

தம்பி!
தம்பி! - என
நானிலம் விளிக்க நின்றான் -
அந்த
நம்பி;
யாழ்
வாழ் - இனம்
இருந்தது - அந்த..
நம்பியை
நம்பி;
அம்மா!
அத்தகு -
நம்பி குடியிருந்த கோயிலல்லவா -
உன்
கும்பி!


சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை..
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்ட வெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
துப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த...
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி!


இருக்கிறானா?
இல்லையா?
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத் தமிழர்க்கு
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!

அம்மா! இந்த
அவல நிலையில் - நீ..
சேயைப் பிரிந்த
தாயானாய்; அதனால் -
பாயைப் பிரியாத
நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி
வந்தால் சென்னை அது -
வரவேற்கவில்லை உன்னை!
வந்த
வழிபார்த்தே -
விமானம் திரும்பியது; விமானத்தின்
விழிகளிலும் நீர் அரும்பியது!

இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித் தாயே! - இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே!
நீ -
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம் தராத - எங்கள்
தமிழ்மண்
நிரந்தரமாய்த்
தேடிக் கொண்டது பழி!!!

கொள்ளி வைப்பான் உன் பிள்ளை

தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்..!

கொண்ட தவம் பலிக்கும்..!
கோடியாண்டு பேர் நிலைக்கும்..!

பருவதத்தில் வதியும் அம்மா
பார்வதி அம்மா!
தெய்வப் பெயரம்மா - இன்று
தெய்வமானீர் அம்மா!

வேலனை எங்கள்
வெற்றித் திருமகனை
மூலனை எங்கள் முதல்வனை
முத்தமிழர் பகையழிக்கும்
காலனை எங்கள் காவலனை
கரிகால் வளவனைக்
கண்ணகிக்குக் கல்லெடுத்த
சேரனைச் செந்தமிழ்
மாமதுரை மன்னன் பாண்டியனை
ஓருருவாய்ப்
பிரபாகரன் என்னும்
பெரும்பெயரில் பெற்றளித்த
தாயே வணக்கங்கள்!
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

வேலுப்பிள்ளையெனும்
வீரத்திருமகனார்
பேர்விளக்க வேண்டிப்
பிரபாகரன் என்னும்
புலியீன்ற தாய்ப்புலியாம்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்

எட்டு கோடித் தமிழர்
எடுத்து அடி வைப்பதற்குக்
கிட்டாத தலைவன் எனும்
எட்டாத இமயத்தை
ஈன்றளித்த பேரிமயத்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

உரிமைக்குப் படை திரட்டி
ஓயாத அலையெழுப்பி
நரிமைக்குக் கரி பூசி
நயவஞ்சகர் அழித்து
நாடாண்ட பெரும் புயலை
ஈன்ற பெரும் புயலாம்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

ஊரறுத்த சிங்களனை
உறவறுத்த காடையனை
பேரறுத்து ஆர்க்க
பிரபாகரன் என்னும்
பேரிடியை வல்லிடியைப்
பெற்றளித்த பெருவானத்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

உலகத் தமிழரெல்லாம்
உள்ள உணர்வால்
உகுக்கும் கண்ணீரால்
உம்பாதம் பற்றி நின்று
உரைக்கும் சொல் ஒன்று!
உரைக்கும் சொல் ஒன்று!

கொள்ளி வைப்பானா பிள்ளை
கொள்ளி வைப்பானா பிள்ளை - எனக்
கோடிமுறை நினைந்து
நைந்திருப்பாய் நலிந்திருப்பாய்!
நாடி தளர்ந்திருப்பாய்!

கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
குமுறும் எரிமலையாய் வெடித்து
கோடியிடியாய் முழக்கமிட்டு
கொக்கரிக்கும் சிங்களனைக்
கொன்று தீயிலிட்டு
கொன்று தீயிலிட்டு அவனுக்குக்
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை

கொண்டவுன் தவம் பலிக்கும்
கோடியாண்டு உன் பேர் நிலைக்கும்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்..!

Friday, May 7, 2010

மூதுரை

உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவரோ-கற்றூண்

பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான்.

(பா-6)


அதிகச் சுமை ஏற்றப்பட்ட கல்தூண், சுமையைத் தாங்க இயலாதபோது, உடைந்து சிதறுமே அல்லாமல் சிறிதும் வளையாது. அது போலவே, மானம் போகும் நிலை ஏற்பட்டால் சான்றோர் உயிரை இழப்பாரே அன்றி, மானம் இழந்து மாற்றானுக்குப் பணிய மாட்டார்கள்.

Tuesday, August 18, 2009

ஜப்பானில் தயாநிதிமாறன்


அமைச்சர் திரு தயாநிதிமாறன் நேற்று (21/07/2009) டோக்கியோ வந்திருந்தார்.
ஜப்பானின் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்துகொண்ட அமைச்சர் அவர்களை நானும் என்னுடைய நண்பர் பாலமுருகனும் சென்று சந்தித்தோம்.
அமைச்சரை மட்டும் அல்லாமல் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொழிலதிபர்கள், பெரும் நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் பல துறை வல்லுனர்களை சந்தித்த இந்த அனுபவம் புதுமையானதாக இருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஜப்பானிய நிறுவனங்களை ஈர்க்க தான் கையாளும் முறையை எடுத்துக்கூறிய அவர், நம் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி பெரிய பிரச்சனையாகும் என்று கருத்து இருந்தது ஆனால் அதுவே இன்று நமக்கு சாதகமாக மாறி பெரிய மனித வள நாடாகவும், மிகப்பெரிய பொருளாதார சந்தையாகவும் உள்ளது. அதிக்கப்படியான படித்த இளைஞர்களை கொண்ட இந்திய சந்தை அதிகம் வாங்கும் சக்தி படைத்தது,
ஆகையால் ஜப்பானிய நிறுவனங்களை தான் அழைப்பது நம் நாட்டில் வந்து பொருள் வாங்குங்கள் என்று சொல்வதற்கு இல்லை மாறாக நீங்கள் இந்தியாவிற்கு வாருங்கள் முதலீடு செய்யுங்கள் பொருள்களை தயாரியுங்கள் அங்கேயே விற்று பணமாக்கி பணத்தை உங்கள் நாட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறிய அவர், இது தனது பொருளாதார மந்திரம் எனவும் பெருமையோடு கூறிக் கொண்டார். (ஆஹா என்ன ஒரு பொருளாதாரக் கொள்கை வெள்ளைக்காரன் அவனே வந்து சுரண்டிகிட்டு போனான், அனால் இன்று நம் நாடு சுதந்திரம் அடைந்து கல்வியிலும் மற்றும் பல துறைகளிலும் வளர்ச்சி அடைந்து பல்துறை வல்லுனர்களையும், மேதாவிகளையும் உருவாக்கி, அவர்கள் சென்று அழைகின்றனர் வாருங்கள் எங்கள் நாட்டுக்கு வந்து எங்கள் நாட்டு செல்வங்களை சுரண்டி எடுத்து செல்லுங்கள் என்று )
நண்பர் பாலமுருகன் ஈழத் தமிழ்ர்களைப் பற்றிய ஒரு கேள்வியை எழுப்பினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தி.மு.க ஈழ தமிழார் நலனுக்காக நாங்களும் பாடுபடுவோம் தனி ஈழம் அமைய பாடுபடுவோம் என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால் தேர்தலுக்கு பிறகு அதைப்பற்றி பேசுவே இல்லையே அது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்க்கு பதிலளித்த அமைச்சர்.
நாங்கள் எதுவும் செய்யாமல் இல்லை, இப்போது கூட மத்திய அரசு மூலமாக 500 கோடி கொடுத்துள்ளோம் என்றார்.
போரில் பல பேர் இறந்தும் அதற்கும் பின்பும் 3 லட்சம் தமிழ்ர்கள் முள்வேலிக்குள் அகப்பட்டு தினம் தினம் துன்பத்திற்க்குள்ளாகும் அவலம் தொடர்கிறதே?
ராஜீவ் மரணத்திற்கு பிறகு இலங்கை பிரச்சனையில் நேரடியாக ஈடுபடமுடியவில்லை என்றும்,
ராஜீவ் கொலையில் தாங்களும் (தி.மு.க) குற்றம் சாட்டப்பட்டதாகவும், ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களை தாழ்வாக எண்ணுவதாகவும்,
80 களில் அவர் மாணவராக இருந்த போது ஈழப்பிரச்சனைக்காக பணம் திரட்டி கொடுத்ததாகவும்,
இப்போது எந்த அரசியல் கட்சிக்கும் உண்மையான் உணர்வு இல்லை, இளைஞர்கள் அவர்களுடைய தொழிலை பார்க்கவே அவர்களுக்கு நேரம் உண்டு, இதைப் பற்றி எல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை என்றும் தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.
இதில் பல எதிர் வாதங்களை வைக்கலாம் என்றாலும், சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உங்களால் முடிந்ததை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு முடித்துகொண்டோம்.
மேலும் ஜப்பானில் உள்ள தமிழ் இளைஞர்களும் ஈழப்பிரச்சனையில் அக்கறை செலுத்துகிறார்கள் என்றும் தான் ஜப்பான் சென்ற போது இப்படி ஒரு கேள்வியை எதிர்கொண்டதை இது சம்பந்தமாக விவாதங்களில் கலந்து கொள்ளும் போது நினைவு கூறுவார் என்ற காரணத்திற்காக ஈழப்பிரச்சனை சம்பந்தமான கேள்வியை எழுப்ப வேண்டும் என்ற உறுதியுடனே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றோம்.
இப்படி ஒரு கேள்வியை எழுப்பியது கண்டிப்பாக பயன் உள்ளதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை உங்களுடன் பகிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி!
நன்றி!
வணக்கம்!

Thursday, May 21, 2009

இல‌ங்க‌யில் ந‌ட‌ந்த ம‌னிதப்பேர‌வ‌ல‌த்தை விசாரிக்க‌ வேண்டும்!‌ த‌மிழ‌ர்க‌ள் ஜ‌ப்பான் அர‌சாங்க‌த்திற்க்கு கோரிக்கை!

「スリランカで人道問題調査を」タミル人が日本政府に要請 政府軍は、「人間の楯」・非戦闘員数十万人に砲撃を浴びせた 田中龍作2009/05/21


 18日まで続いたスリランカ政府軍による反政府武装勢力LTTEへの猛攻では、「人間の楯」となった非戦闘員のタミル人に夥しい数の死傷者が出た。「実態を調査し援助の手を差し伸べてほしい」と在日タミル人たちが20日、外務省に要請した。





国連への働きかけを外務省に要請した在日タミル人(外務省前で筆者撮影) 
霞ヶ関に足を運んだのは、日本の自動車メーカーで技術者として働くラマリンガン・アルルさん(30才)、カシナサン・バラムルガンさん(29才)ら9人。いずれもインドのタミルナド州出身だ。3世紀頃、インドのタミル・ナド州から渡って来たとされるスリランカの少数民族タミル人は彼らにとって同胞である。 同胞が政府軍のLTTE掃討作戦で犠牲となった。正確に言うと死傷者の数など惨劇の実態さえ明らかになっていない。バラムルガンさんは「自分の家族が被災したように胸が痛い」と話す。
ODA最大供与国である日本の動きは鈍い。 
筆者もJanJan(18日付)「スリランカ血の海…」で報告したが、LTTEがタミル人の非戦闘員数十万人を「人間の楯」にとり、そこに政府軍が砲撃を浴びせた。
 小学校の教室となっていた野戦病院が爆撃され、児童を含む378人が死亡した。政府軍スポークマンは「LTTEの仕業だ」と主張するが、病院の医師は「砲弾は政府軍の支配地域から飛んできた」と証言する。 
国際人道法に違反する病院への攻撃の実態を知っている医師が行方不明になっている、との情報もある。被害の実態を明らかにするためにもジャーナリストや援助団体を、戦闘があった地域に入れるべきだが、スリランカ政府は拒んでいる。 外務省を訪れた一行の一人ラバスブラマニアンさん(28才)は「ジェノサイド(集団虐殺)があった」と主張する。 
ラマリンガン・アルルさんらは外務省アジア大洋州局南西アジア課の課員に「『国連が正式な調査団を入れるよう』日本政府は働きかけてほしい」とする要請文を手渡した。イギリスなどでもタミル人が国連への働きかけを政府に求めている。
****************************************
செய்தியின் தமிழாக்கம்!
இல‌ங்க‌யில் ந‌ட‌ந்த ம‌னிதப்பேர‌வ‌ல‌த்தை விசாரிக்க‌ வேண்டும்!‌ த‌மிழ‌ர்க‌ள் ஜ‌ப்பான் அர‌சாங்க‌த்திற்க்கு கோரிக்கை! இல‌ங்கை அர‌சு இராணுவ‌ம் பாதுகாப்பு வ‌லைய‌த்தில் இருந்த‌ ஒரு ல‌ட்ச்ச‌ம் ம‌க்க‌ள் மீது குண்டும‌ழை!

இந்த‌ மாத‌ம் 18 ஆம் தேதி வ‌ரையில் ந‌ட‌ந்து முடிந்த‌ இல‌ங்கை அர‌சுக்கும் விடுத‌லைப்புலிக‌ளுக்கும் ந‌ட‌ந்த‌ ச‌ண்ட‌யில் ஏரால‌மானோர் கொல்ல‌ப்ப‌ட்டும் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கானோர் ப‌டுகாய‌மும் அ‌டைந்துள்ள‌ன‌ர். அங‌கே ந‌ட‌ந்த‌ ம‌னிதப்பேர‌வ‌ல‌த்தை வெளி உல‌குக்கு தெரிய‌ப‌டுத்த‌ முய‌ற்சி மேற்கொள்ள‌ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள‌ன‌ர்.

ஜ‌ப்பானில் ஆடோமொபையில் க‌ம்பெனியில் வேலைபார்க்கும் அருள் ராம‌லிங்க‌ம், பால‌முருக‌ன் காசிநாத‌ன் போன்ற 9 பொறியிய‌லால‌ர்க‌ள் டோக்யோ க‌‌சுமிகாசெகியில் உள்ள‌ வெளியுற‌வு அலுவ‌ல‌க‌திற்க்கு வ‌ந்திருந்த‌ன‌ர், இவ‌ர்க‌ள் அனைவ‌ருமே இந்தியாவின் த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள. த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளும் இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளும் தொப்புள் கொடி உற‌வுபூண்ட‌வ‌ர்க‌ள்.

தீவிர‌வாத‌திற்க்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு விடுத‌லைப்புலிக‌ளின் மீது இல‌ங்கை அர‌சு தொடுத்த‌ போரில் ஏராள‌மான‌ பொதும‌க்க‌ள் த‌ங்க‌ள் உயிரை இழ‌ந்துள்ள‌ன‌ர்.ஆனால அங்கு ந‌ட‌ந்த‌ இராணுவ‌ தாக்குத‌லில் இற‌ந்த‌ போன‌ ம‌ற்றும் காய‌ம‌டைந்த‌வ‌ர்க‌ளின் ச‌‌ரியான‌ விவ‌ர‌ம் வெளிவ‌ர‌வில்லை.எங்க‌ள் உற‌வுக‌ளின் இந்த‌ சொல்லொன்னா துய‌ர‌மான‌து எங்க‌ளுக்கு ஆழ்ந்த‌ ம‌ன‌ வேத‌னையை த‌ருகிற‌து என்று இங்கு வ‌ந்திருந்த‌ பால‌முருக‌ன் கூறினார்.

18 ஆம்தேதி நாம் வெளியிட்டுருந்த‌ செய்தி அறிக்கையில், விடுத‌லைபுலிக‌ளின் ம‌னித‌க்கேட‌ய‌ங்க‌ள் இன்று கூறிக்கொண்டு ம‌க்க‌ள் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌ செய்தியை சொல்லி இருந்தோம். ம‌ருத்துவ‌ம‌னை ம‌ற்றும் ப‌‌ள்ளியின் வ‌குப்ப‌ரை மீது இராணுவ‌ம் தாக்கிகுத‌லில் 378 குழ‌ந்தைக‌ள் கொல்ல‌ப‌ட்டிருந்த‌ன‌ர். இந்த‌ செய்தியை வெளியிட்ட‌ இல‌ங்கை அர‌சோ இதை விடுத‌லைப்புலிக‌ல்தான் செய்த‌ன‌ர் என்று கூறிருந்த‌ன‌ர் , ஆனால் உண்மை என்ன‌வென்றால் இந்த‌ தாக்குத‌ல் அர‌சு இராணுவ‌ப் ப‌குதில் இருந்துதான் வ‌ந்த‌து என்று அங்கு இருந்த‌ ம‌ருத்துவ‌ரே ப்ர்ர்த்த‌தாக‌ சொல்லி இருந்தார்.
அனைத்துல‌க‌ ம‌னிதாபிமான‌ விதிமீற‌லான‌ இந்த‌ செய‌லைப் பார்த்த‌ ம‌ருத்துவ‌ர் காண‌ம‌ல் போய்விட்டார், இவ்வ‌ரான‌ போர்ப் ப‌குதிக‌ளில் உண்மை செய்தியை அறிய‌ ப‌த்திரிக்கையாள‌ர்க‌ள் குழு உள்ளே சென்றுப் பார்ப்ப‌து வ‌ழ‌க்க‌ம் ஆனால் அவ‌ர்க‌ளுக்கு இல‌ங்கை அர‌சு அனும‌தி அளிக்க‌ மறுத்துவிட்ட‌து.

இங்கு வ‌ந்திருந்த‌ பால‌சுப்ர‌ம‌ணிய‌‌ன் இல‌ங்கை அர‌சு மிக‌க் கொடுர‌மான‌ இன‌ அழிப்பை செய்துகொண்டிருகிற‌து என்று தெரிவித்தார்.

இங்கு வ‌ந்திருந்த‌ அருள் ராம‌லிங்க‌ம் என்ப‌வ‌ர் தென்மேற்க்கு ஆசிய‌ துறை சேர்ந்த‌வ‌ர்க‌ளிட‌ம் தெரிவித்த செய்தி என்ன‌வென்றால் ஐநா மூல‌ம் முறைப்ப‌டி ச‌ர்வ‌தேச‌ ப‌த்திரிக்கையால‌ர்க‌ள் குழு ம‌ற்றும் ம‌னித‌ நேய‌ அமைப்புக‌ளை போர்ப்ப‌குதிக்கு அனுப்பி அங்கே ந‌ட‌ப்ப‌வ‌ற்றை வெளிக்கொண‌ர‌ ஜ‌‌ப்பான் அர‌சாங்க‌ம் முய‌ற்ச்சி மேற்கொள்ள‌ ‌ வேண்டும் என்று இங்கு வ‌ந்த‌ அனைவ‌ரின் சார்பாக‌வும் கேட்டுக்கொண்டார். இதேப்போன்று கோரிக்கையை இங்கிலாந்து போன்ற‌ நாடுக‌ளில் வாழும் த‌மிழ‌ர்க‌ளும் அந்த‌ அந்த‌ நாடுக‌ளுக்கும் முன்வைத்துள்ள‌ன‌ர்.

Saturday, January 31, 2009

இன‌த்திற்க்காக‌ இன்னுயிரை ஈந்த‌ முத்துகும‌ர‌ன் அவ‌ர்க‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம்!!!


இன‌த்திற்க்காக‌ இன்னுயிரை ஈந்த‌ முத்துகும‌ர‌ன் அவ‌ர்க‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ங்க‌ள்!!!
செய்வ‌த‌றியாது த‌வித்து நிற்கின்ற‌து உல‌க‌த் த‌மிழின‌ம்........க‌ண்டிப்பாக‌ அர‌சிய‌ல் க‌ட்சி த‌லைவ‌ர்க‌ளைத் த‌விர‌ ஒவ்வொரு த‌மிழினும் குமுறிக்கொண்டிருகிறான் ஈழ‌த்த‌மிழின‌த்தின் நிலைக் க‌ண்டு........முத்துகும‌ரா ஏன‌ப்பா இப்ப‌டி செய்தாய், அறிவு த‌ள‌த்தில் போரிடும் போர்வீர‌ன் உம்மை இழ‌ந்த‌து த‌மிழின‌த்தின் பெரிய‌ இழ‌ப்பு இல்லையா?எப்ப‌டிய‌ப்பா உன‌க்கு இவ்வ‌ள‌வு துனிச்சல் வ‌ந்த‌து உம‌து உயிரை மாய்த்துக்கொள்ள‌?வாய்ச்ச‌வ‌டால் விட்டுக்கொண்டு ஒரு துரும்பைக்கூட‌ கிள்ளி போடாத‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் நீ உன் உயிரை துச்ச‌மாய் நினைத்து தீக்கு இரையாகியிருகிறாய்.........விய‌க்க‌ வைக்கின்ற‌து உம் இன‌ப்ப‌ற்று!!!உன்னை ந‌ம்பி இருக்கும் உம் குடும்ப‌த்தின‌ரை மீளாத்துய‌ரில் விட்டுவிட்டு நீ மீளாம‌ல் போய்விட்ட‌யே!அவ‌ர்க‌ளுக்கு அறுத‌ல் யாரால் சொல்ல‌முடியும்?நீ இட்ட‌ தீ திக்கெட்டும் ப‌ர‌வ‌ட்டும் த‌மிழின‌ எழுச்சி தீயாக!அது பெற்ற‌டுக்க‌ட்டும் ந‌ம் இன‌ விடுத‌லை‌யை..........இன‌த்திற்க்காக‌ இன்னுயிரை ஈந்த‌ ம‌ற‌வ‌ர்குல‌ த‌மிழா!உம‌க்கு என் வீர‌ வ‌ண‌க்க‌ங்க‌ள்!!! .............தீ குளிக்கும் முன் அவர் வினியோகித்த அறிக்கை...
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99
அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.